விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில் நேற்றுக்காலை அத்தொகுதியின் வேட்பாளரும் பாஜக தமிழக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிக்கச் சென்றபோது அங்கு பணியில் இருந்த சூர்யா என்ற காவலர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு தமிழிசை முதலுதவி சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப்பின் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தக் காவலர் மேற்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். தமிழிசை சௌந்தரராஜன் பிரபல மருத்துவர் என்பது குறிப்பிடத் தக்கது. படம்: ஊடகம்
மயங்கி விழுந்த காவலருக்கு தமிழிசை முதலுதவி
1 mins read
-

