வேலூர்: வாக்காளர் பட்டிய லில் இறந்துபோனவர்களாகக் குறிக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் உயிருடன் வந்து தங்கள் வாக்குரிமையைப் பெற்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மணி (70 வயது), சகாதேவன் (80 வயது) ஆகிய இருவரும் வேலூர் நகர வாக்குச்சாவடிக்கு வந்தபோது, வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் ஆவேசமடைந்த இருவரும், வாக்களிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் இருப்பதாக வாதிட்டனர். பொதுமக்களும் இருவருக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதை யடுத்து இருவரும் வாக்க ளிக்க அனுமதிக்கப் பட்டனர்.
'இறந்துபோன' வாக்காளர்கள் உயிருடன் வந்தனர்
1 mins read

