பலாசூர்: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பலாசூர் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு திரு மோடி பேசினார். "மத்தியில் ஆளும் பாஜக அரசு பணக்காரர்களுக்கானது அல்ல. ஏழைகளுக் கானது. பாஜகவின் தொண்டன் என்ற முறையில் என்னுடைய ஒரே மந்திரம் வளர்ச்சிதான். நாட்டில் பிற மாநிலங்களைவிடப் பாஜக ஆளும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன," என்றார் திரு மோடி.
'பாஜக ஆளும் மாநிலங்கள் அதிவேகத்தில் வளர்ச்சியடைகின்றன'
1 mins read

