பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இரு ஆடவர்கள் பரிதாப பலி

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இரு ஆடவர்கள் பரிதாப பலி

1 mins read

சிவகாசி: பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகாசி அருகே பூலாவூரணியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், 80 உற்பத்தி அறைகள் உள்ளன. இவற்றில் பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். நேற்று முன்தினம் காலை குறிப்பிட்ட ஓர் அறையில் சிலர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மருந்தில் ஏற்பட்ட உராய்வால் திடீர் விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டட அறை தரைமட்டமானது. பணியில் இருந்த ஆடவர்கள் இருவர் பலியாகினர்.