சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 18ஆம் தேதி காலை 11 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில், செயற்குழு உறுப்பினர்களாக உள்ள 250 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு ஜெயலலிதா கட்சியில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இக்கூட் டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
18ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு
1 mins read

