காஞ்சிபுரம்: ஆட்டோவில் சென்றபோது பக்கவாட்டில் வந்த லாரியில் தலைமுடி சிக்கியதில் திருப்பதியைச் சேர்ந்த 38 வயது மோகனா பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் தனது கணவர், குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் வந்திருந்தார் மோகனா. அங்குள்ள கோவில்களைச் சுற்றிப்பார்த்த பின்னர், ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். மஞ்சம்பாடி அருகே ஆட்டோ வந்தபோது, மோகனாவின் தலைமுடி வெளியே பறந்து, பக்கத்தில் சென்ற லாரியின் முன்பக்கக் கதவில் சிக்கிக்கொண்டது. இதனால் ஆட்டோவில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட மோகனா, லாரியில் சிக்கி அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோவில் சென்றபோது லாரியில் தலைமுடி சிக்கி பெண் பரிதாப பலி
1 mins read

