புதுக்கோட்டை: தேர்தல் களத்தில் மட்டுமே அரசியல் இருக்க வேண்டும் என்றும் அது முடிந்தபின் மக்கள் நலன்தான் முக்கியம் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவை ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை என்றார். "மாநில வளர்ச்சியில் நாங்களும் ஆளுநரும் ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எந்தவித மோதலும் கிடையாது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது," என்றார் நாராயணசாமி.
மக்கள் நலன்தான் முக்கியம் - முதல்வர் நாராயணசாமி
1 mins read

