ஸ்டாலின்: சட்டமன்றத்தில் நுழைய கருணாநிதிக்கு சக்கர நாற்காலி வசதி தேவை

ஸ்டாலின்: சட்டமன்றத்தில் நுழைய கருணாநிதிக்கு சக்கர நாற்காலி வசதி தேவை

1 mins read

சென்னை: சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் நுழைய சக்கர நாற்காலி வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். "சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நானும் துணைத் தலைவர், கொறடா, திமுக எம்எல்ஏக்கள் ஆகியோர் பேரவைத் தலைவரை அவரது அறையில் சந்தித்தோம். தலைவர் கலைஞர் சட்டமன்றத்துக்கு வந்து பங்கேற்கும் வகையில் அவருடைய சக்கர நாற்காலி சட்டமன்றத்திற்குள் வரும் வகையில் வசதி செய்து தருமாறு ஏற்கெனவே கடிதம் கொடுத்து இருந்தோம். இப்போதும் அதை வலியுறுத்தி னோம். ஆனால் இப்போது அவருக்கு ஒதுக்கப் பட்டு இருக்கும் இருக்கைக்கு சக்கர நாற்காலி வந்து செல்ல முடியாத அளவில் 2வது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது," என்று ஸ்டாலின் தெரிவித்தார்.