செங்கல்பட்டு: தமிழகத்தில் தாய்மொழி தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். ரயில் நிலையங்களில் தமிழில் முறையாக அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தமிழுக்கு முதலிடம்: குமரி அனந்தன் வலியுறுத்து
1 mins read

