ஹைதராபாத்: குறைந்த மின்சக்தியில் சிறப்பாக இயங்கக் கூடிய மின்விசிறிகளை குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில் அதிக செயல்திறனுடன் இயங்கத் தக்க மின்விசிறிகள் வழங்கும் தேசிய திட்டத்தை சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார். இந்த வகை மின்விசிறிகள் கடைகளில் 1,750 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அரசு திட்டத்தின் கீழ் இவை 1,173 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளன.
குறைந்த விலைக்கு மின்விசிறி விற்பனை ஆந்திராவில் அறிமுகம்
1 mins read

