மைசூருவில் கோலாகலமாக நடந்து முடிந்த மகாராஜாவின் வாரிசு திருமணம்

மைசூருவில் கோலாகலமாக நடந்து முடிந்த மகாராஜாவின் வாரிசு திருமணம்

1 mins read
60291b2e-8361-4b0e-b4bb-e99803b60084
-

மைசூரு மகாராஜாவின் வாரிசு யதுவீரின் திருமணம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நடந்த விழாவில் ராஜ ஸ்தான் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தோழியுமான திரி‌ஷிகா குமாரியை யதுவீர் கரம் பி டித்தார். மைசூரு மன்னரின் வாரிசாக தத்தெடுக்கப்பட்டு பட்டாபிஷேகம் செய்யப்பட்ட யதுவீர், அமெரிக்காவில் படித்தவர். வேத மந்திரங்கள் முழங்க நடை பெற்ற இந்த திருமண விழாவில் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மைசூர் அரண்மனையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருமணச் சடங்குகள் தொடங்கின. படம்: ஊடகம்