ஆடு வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர்

ஆடு வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர்

1 mins read

சிலாநகர்: 24 வயது ஆடவர் ஒருவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று அண்டை வீட்டுக்காரரின் வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத் தில் உள்ள சிலாநகர் கிராமத்தில் நடந்துள்ளது. சம்சுதீன் வளர்த்து வந்த ஆடு, அண்டை வீட்டுக் காரரான ஜாவத் வீட்டுக்குள் புகுந்ததால் ஆத்திரமடைந்த ஜாவத், துப்பாக்கியை எடுத்து சம்சுதீனை சுட்டுக்கொன்றார்.