கோவை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாடு முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். "மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்கும். "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எந்தவித முறைகேடுகள் நிகழவும் அனுமதிக்காமல் நேர்மையாக நடத்த வேண்டியது அரசின் கடமை," என்றார் ராமகிருஷ்ணன்.
உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த ராமகிருஷ்ணன் வலியுறுத்து
1 mins read

