பெங்களூரு: "உடுப்பி = சிக்மங்களூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஷோபா சொல்கிறபடிதான் எடியூரப்பா நடந்துகொள்கிறார். மாவட்டத் தலைவர்கள் நியமனத்தில் தன்னிச்சையாக நடந்துகொள்கிறார்," என்று மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலவை எதிர்க்கட்சித் தலைவரான ஈஸ்வரப்பா தலைமையில் அதிருப்தியாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இதில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், எடியூரப்பாவுக்கு எதிராக கடும் புகார்களைக் கூறியுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பும் எடியூரப்பாவின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளது. அமித் ஷாவை சந்தித்து எடியூரப்பா பற்றி புகார் அளிக்க கர்நாடக பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர்கள் நெருக்குதல்
1 mins read

