நைஜீரியா: இந்தியர்கள் கடத்தல்

நைஜீரியா: இந்தியர்கள் கடத்தல்

1 mins read

அபுஜா: ஆந்­திர மாநி­லம், விசா­கப்­பட்­டி­னத்தைச் சேர்ந்த சாய் சீனி­வாஸ் (படம்) என்­ப­வர் நைஜீ­ரியா நாட்­டின் க்போக்கோ பகு­தி­யில் உள்ள டங்­கோட்டே சிமெண்ட் தொழிற்­சாலை­யில் பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்தார். கடந்த புதன்­கி­ழமை சீனி­வா­சும் அவ­ரு­டன் பணி­யாற்­றும் மற்­றோர் இந்­தி­ய­ரான அனிஷ் ஷர்மா என்­ப­வ­ரும் ஒரு வாக னத்தில் ஏறி வேலைக்குச் சென்று கொண்­டி­ருந்த­னர். அப்­போது சாலை­யில் போக்குவரத்து சிக்னல் விளக்கு அருகே துப்­பாக்கி முனை­யில் அந்த வாகனத்தை வழி­ம­றித்த தீவி­ர­வா­தி­கள் அவர்­கள் இரு­வரை­யும் கடத்­திச் சென்ற­னர்.

இது­தொ­டர்­பாக, விசா­கப்­பட்­டி­னத்­தில் வசிக்­கும் சாய் சீனி­வா­சின் மனைவி லலிதா என்­ப­வர் கடந்த இரு­நாட்­க­ளாக கைபேசி மூலம் கண­வரைத் தொடர்­பு­கொள்ள முயன்­றுள்­ளார். ஆனால், அவ­ரு­டன் பேச முடி­யா­மல் போனதை­ய­டுத்து, அவர் வேலை செய்­யும் தொழிற்­சாலையைத் தொடர்புகொண்ட­போது, சாய் சீனி­வாஸ் கடத்­தப்­பட்ட விவ­ரம் தெரி­ய­வந்தது. விசா­கப்­பட்­டி­ன ஆட்சியரிடம் லலிதா அளித்த புகாரை­ய­டுத்­து இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ச­கத்­தின் மூல­மாக நைஜீ­ரி­யா­வில் உள்ள இந்­தியத் தூத­ரக அதி­கா­ரி­கள் மற்­றும் உள்­நாட்டுக் காவல்­துறை­யி­னர் கடத்­தப்­பட்ட இந்­தி­யர்­கள் இரு­வரை­யும் மீட்­கும் நட­வ­டிக்கை­யில் ஈடு­பட்டு வரு­கின்ற­னர்.