பேருந்து மோதி யானை காயம்

பேருந்து மோதி யானை காயம்

1 mins read
c568e5d3-99ab-49c1-805f-5e4eac7d4d86
-

ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சா லையைக் கடக்க முயன்ற யானை மீது அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மோதியதால் படுகாயமடைந்த யானை நடக்க முடியாமல் சாலையிலேயே படுத் துக்கொள்ள, அந்தச் சாலையில் நேற்றுக் காலை சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த நேரத்தில் இரண்டு யானைகள் சாலையைக் கடக்க முயன்றதாகவும் அவற்றுள் ஒரு யானை பாதுகாப்பாக வனப் பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து மோதி படுகாயமடைந்த காட்டு யானை. படம்: தமிழக ஊடகம்