போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங் களில் கடந்த 48 மணி நேரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரேவா மற்றும் சட்னா மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக சட்னா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9 அங்குலத்துக்கும் அதிகமான மழை பெய்ததால் இங்குள்ள பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு வெள்ளநீரில் தீவுகளைப்போல் காணப்படுகின்றன. இங்குள்ள ரேவா, சட்னா, ஹோசங்காபாத், ஜபல்பூர், ரெய்சன், சாகர், டமோ, போபால், நரசிங்பூர், விடிஷா, பெட்டல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தொடர் மழை; மக்கள் அவதி
1 mins read

