'தீவிரவாதத்தைத் தூண்டவில்லை'

'தீவிரவாதத்தைத் தூண்டவில்லை'

1 mins read

மும்பை: "நான் தீவிரவாதத்தைத் தூண்டவில்லை," என்று சர்ச்சைக்குரிய போதகர் சாஹிர் நாயக் சவுதி அரேபியாவிலிருந்து இந்திய ஊடகங்களுக்கு ஸ்கைப் வழியாக அளித்த பேட்டியில் கூறினார். அண் மையில் பங்ளாதேஷ் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய ரோகன் இம்தியாஸ் மும்பையைச் சேர்ந்த சாஹிர் நாயக்கின் பேச்சுகளை சமூக வலைத்தளத்தில் பரப்பியிருந்தான். இதனால் தீவிரவாதத்தைத் தூண்டி விடுவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுகளை சாஹிர் நாயக் நேற்று மறுத்தார்.