தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி

தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி

1 mins read
3db2f919-c7c2-45a7-b331-65bd8c5892b7
-

சென்னை: தனது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், பிரதமரிடம் இருந்து தமிழில் கடிதம் வந்துள்ளது மகிழ்ச்சி தருவதாகக் கூறினார். "பிரதமருக்கு அவரது தாய்மொழியான குஜராத்தி மொழியில் நன்றி அறிவித்தல் கடிதம் அனுப்பி உள்ளேன். அதில், 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மாற்றினால் நாட் டின் ஒருமைப்பாட்டுக்கு அடித் தளமாக அமையும். உங்கள் ஆட்சிக் காலத்தில் இந்தி பேசாத மக்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள் ளேன்," என்றார் சிவா.