நாட்டு மக்களைப் பிரித்தாளும் அரசியலை பொறுக்க முடியாது

நாட்டு மக்களைப் பிரித்தாளும் அரசியலை பொறுக்க முடியாது

1 mins read
a8abf39e-79e6-41d3-857a-a5548d21de68
-

கோல்கத்தா: இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி அரசு பசு மாட்டை வைத்து அரசியல் செய்வதாக மம்தா பானர்ஜி சாடியுள்ளார். "நாட்டு மக்களைப் பிரித்தாளும் அரசியலை ஒரு போதும் பொறுத் துக்கொள்ள முடியாது," என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஆட்சிக்கு வந்த போது பேசிய மம்தா, "காவி பாகு­பாட்டு அர­சி­யல்" குறித்­துக் கடு மையாக விமர்சித்தார். இப்போது தியா­கிகள் நாளை யொட்டி கோல்­கத்­தா­வில் மிகப்­ பெ­ரிய பேர­ணி­யில் மம்தா "பசு அர­சி­யலை நிறுத்­துமாறு பாஜக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள் ளார்.

ஒரு அர­சி­யல் கட்­சி­யின் சார்­பா­கவோ அல்லது அதன் சகோ­தர அமைப்­பின் பெய­ரிலோ சிலர் வீடு வீடாகச் சென்று எவ்­வ­ளவு பசு மாடு வைத்­தி­ருக்­கி­றீர்­கள் என்று கேட்­ப­தாக நான் கேள்­விப்­படு­கி­றேன். இதுபோன்று கேள்வி கேட்க அவர்­களுக்கு என்ன உரிமை இருக்­கிறது? எது வேண்டும், எது வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது எனவும் இதை சிலர் மறந்துவிட்டனர் என்றும் அவர் கூறினார்.