சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 41 நாட்கள் பணியாற் றிய மத்திய தலைமைக் கணக்காளர் அலுவலக ஊழியர்களுக்கு இதுவரை அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலர் துரைபாண்டியன், தேர்தல் ஆணையமும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் இவ்விஷயத்தில் தலையிட்டு ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தேர்தல் பணிக்காக ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.22 ஆயிரம் வரை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் முடிந்தும் ஊதியம் பெறாத கணக்காளர் அலுவலக ஊழியர்கள்
1 mins read

