காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியின் மனைவி பத்மா, (45). இவர் பல ஆண்டுகளாக பட்டுப்புடவை நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நெய்த பட்டுப்புடவை தேசிய அளவில் சிறந்த வடிவமைப்புக்கான பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் பத்மாவுக்கு மத்திய கைத்தறி ஜவுளித்துறை அமைச்சகம் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.
பட்டுப்புடவை வடிவமைப்பு; காஞ்சிப் பெண்ணுக்கு தேசிய விருது
1 mins read

