நடுவானில் பயணி ரகளை

நடுவானில் பயணி ரகளை

1 mins read

மும்பை: துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு சென்ற இண்டிகோ விமானத்தில் நேற்றுக்காலை பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப் பட்டது-. விமான ஊழியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், திடீரென உணவுப்பொருட்கள் வைக்கும் வண்டியில் ஏறி அமர்ந்துள் ளார். மும்பையில் விமானம் இறங்கியதும் ரகளையில் ஈடு பட்ட பயணி கீழே இறக்கப் பட்டு மத்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டார். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.