என் பள்ளியை விட உங்களது பொதுக்கூட்டம் முக்கியமா என மோடிக்கு மாணவன் கடிதம்

என் பள்ளியை விட உங்களது பொதுக்கூட்டம் முக்கியமா என மோடிக்கு மாணவன் கடிதம்

1 mins read
c8ba624d-8dfb-4ed5-a9cb-2c5314c4feee
-

மத்தியப்பிரதேசம்: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்காக பள்ளிப் பேருந்துகளை பயன்படுத்தக் கூடாது என 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவன்ஷ் ஜெயின்(படம்) மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வேக மாகப் பரவி வருகிறது. பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு தொண்டர்களையும் பொது மக்களையும் அழைத்துவர மாநில அரசு நிர்வாகம் பள்ளிப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறது. இதனால் கோபமடைந்த தேவன்ஷ், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உங்களது பொதுக்கூட்டம் எனது பள்ளியை விட முக்கியமானதா-? இது குறித்து ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகானிடம் சொல்லுங்களேன் என கூறியுள்ளான். இதனை அடுத்து மோடி நிகழ்ச்சிக் காக பள்ளிப் பேருந்துகளை இனி பயன்படுத்த மாட்டோம் என அறிவித் துள்ளது ம.பி. அரசு.