விஜயகாந்த்: சட்டமன்றம் போர்க்களமாக மாறிவிட்டது

விஜயகாந்த்: சட்டமன்றம் போர்க்களமாக மாறிவிட்டது

1 mins read
7dd1671e-0980-4772-b17a-33ace7fd6379
-

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் சட்டசபையை மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிமுக, திமுக ஆகிய இரு தரப்பினரும் போர்க் களமாகவே மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். "இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்," என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்தார்.