சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக...

சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக...

1 mins read
267dd9ad-a029-4d0b-8a3b-1e346f4ed63b
-

ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக மின்தூக்கி சுவரில் உள்ள கற்கள் உடைந்து விழுந்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டுக் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை 15 முறை மேற்கூரைகளும் 24 முறை தானியங்கி கண்ணாடிக் கதவுகளும் 20 முறை தடுப்புக் கண்ணாடிகளும் 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் ஒருமுறை விளக்குக் கண்ணாடியும் ஒரு முறை அறிவிப்புப் பலகை தொலைக்காட்சியும் உடைந்து விழுந்து உள்ளன. இவ்வாறு நடந்த 66 விபத்துகளில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் தற்போது 67வது முறையாக மீனம் பாக்கம் உள்நாட்டு முனையத்தில் மின்தூக்கி அறையின் சுவரில் பதிக்கப்பட்ட இரண்டு அடி அகலமும் ஏழு அடி நீளமும் கொண்ட சலவை கற்களில் ஐந்து உடைந்து விழுந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.