புதுடெல்லி: இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ரகசியங்கள், ஆஸ்திரேலிய பத்திரி கையின் இணையத்தளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிசிஎஸ்என் என்ற நிறுவனம் இந்தியாவுக்காக 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில், அதன் வடிவமைப்பு, தாக்கும் திறன் உள்ளிட்டவைகள் போன்ற ரகசியங்கள் கொண்ட 22 ஆயிரம் பக்க ஆவணங்கள் அம்பல மாகி இருப்பதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார். "இவை இந்தியாவில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை. கணினிகளில் இருந்து ஊடுருவப்பட்டு இருக்க லாம்," என்றும் அவர் சொன்னார்.
இந்திய நீர்மூழ்கி கப்பல் ரகசியம் அம்பலம்; விசாரணைக்கு உத்தரவு
1 mins read

