மும்பை: மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண் களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்காவுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனி நபர் உரிமையைப் பறிப்பதற்குச் சமம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாகத் தனது உத்தரவை அமல்படுத்த 6 வார காலத் தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்காவிற்குள் பெண்களை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு
1 mins read

