'அதிமுகவின் அர்த்தமற்ற வாக்குறுதிகள்'

'அதிமுகவின் அர்த்தமற்ற வாக்குறுதிகள்'

1 mins read
6b29f736-8985-478d-8baa-1b8c4c1a2bb6
-

சட்­ட­மன்றத் தேர்­த­ல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் பிரசாரத்தின்போது அதி­முக அர்த்­த­மற்ற தேர்தல் வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்ததாகத் தேர்­தல் ஆணை­யம் இப்போது கண்ட­னம் தெரி­வித்­துள்­ளது. கடந்த மே மாதம் நடை­பெற்ற தமி­ழக சட்­ட­மன்றத் தேர்­த­லுக்­காக அதி­முக அறிக்கை­யில் விதி­களை மீறி பல்­வேறு அறி­விப்­பு­கள் இடம்­பெற்­றி­ருந்ததாக புகார் எழுந்தது. அதனையடுத்து தேர்­தல் ஆணை­யம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை விளக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் அது பற்றி அக்கட்சி, ஆணையத் திற்குச் சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்­பாக ஒவ்­வொரு குடும்பத்­திற்­கும் இல­வச கைத்­தொலை­பேசி, ஏழை மக்­களுக்கு அம்மா வங்கி அட்டை போன்ற அறி­விப்­பு­களை எப்படி நிறை­வேற்­றப்­போ­கி­றோம் என்­பதை அதிமுக செய­லாளரும் தமிழக முதல்வருமான ஜெய­ல­லிதா விளக்­க­வில்லை என்­பதைத் தேர்­தல் ஆணை­யம் சுட்­டிக்­காட்டி உள்­ளது. இது தேர்­தல் நடத்தை விதி­கள் மற்­றும் உச்­ச ­நீ­தி­மன்ற வழி­காட்­டு­தலை மீறும் செயல் எனக் கண்டித்த தேர்­தல் ஆணை­யம், இது குறித்த தேர்­தல் ஆணை­யத்­தின் கேள்­விக்கு ஜெய­ல­லிதா அளித்த பதில் திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை எனத் தெரி­வித்­துள்­ளது. எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்று தெரியாமல் அளித்த அர்த்­த­மற்ற வாக்­கு­று­தி­களுக்காக அதி­மு­கவைக் கண்­டிப்­ப­தா­க­வும் ஆணை­யம் கூறி­யுள்­ளது.