இலங்கை பங்கேற்காத அனைத்துலக விசாரணை தேவை - திருமாவளவன்

இலங்கை பங்கேற்காத அனைத்துலக விசாரணை தேவை - திருமாவளவன்

1 mins read
ba0916e7-c190-4819-864f-7b00f2c4ccec
-

சென்னை: இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பை இலங்கையிடம் கொடுப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் 25,000 தமிழர்கள் மாயமாகி உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து இலங்கை அரசு இடம்பெறாத வகையில் அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

"ஆகஸ்ட் 30ஆம் தேதி அனைத்துலக காணாமல் போனோர் தினமாக ஐநாவால் அறிவிக்கப்பட்டு, முதல் ஆண் டாக உலகம் முழுவதும் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது. "இலங்கையில் 2009ஆம் ஆண்டு இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையின்போது ஏறத்தாழ 25,000 தமிழர்கள் காணாமல் போய்விட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.