சென்னை: இலங்கையிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பய ணம் மேற்கொண்டவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக் கம்போல் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையைச் சேர்ந்த சாந்தி சோமசுந்தரம் என்ற 46 வயதுப் பெண் பயணி மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்ட போது அவர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ.30 லட்சம். இதேபோல் சென்னையில் இருந்து மலேசியாவுக்குக் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மூவர் தடுத்து வைக்கப்பட்டனர்.
தங்கம், வெளிநாட்டுப் பணம் கடத்த முயற்சி: பெண் உட்பட நால்வர் கைது
1 mins read

