இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு நிரந்தரவாசத் தகுதி உள்ளிட்ட சலுகைகளை இந்தியா வழங்கவுள்ளது. இந்தியாவில் முதலீடுகளைக் கவரும் முயற்சியில் 18 மாதங் களில் யுஎஸ் 1.5 மில்லியன் டாலர் (2.05 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு இந்தியாவில் நிரந்தரவாசத் தகுதி வழங்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்நிய முதலீட்டை ஈர்த்து வரும் அதேநேரத்தில் இந்தியாவில் முதலீடு செய்யும் வெளி நாட்டினருக்கு பல்வேறு சலுகைகளையும் இந்திய அரசு அளித்து வருகிறது. அதன்படி, இந்தியா வில் முதலீடு செய்யும் வெளிநாட்டவருக்கு இந்திய நிரந்தரவாசத் தகுதி சலுகை அளிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் வெளிநாட்டினர் 18 மாதங்களில் 10 கோடி ரூபாய் அல்லது மூன்று ஆண்டுகளில் 25 கோடி ரூபாயை முதலீடு செய்தால் 10 ஆண்டு களுக்கு நிரந்தரவாசத் தகுதி வழங்கப்படும். நிபந்தனைக்கு உட்பட்டு இது மேலும் 10 ஆண்டு களுக்கு நீட்டிக்கப்படும். இவ்வாறு செய்யப்படும் முதலீடுகளால் ஆண்டுக்கு குறைந்தது 20 இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டும். இதன்மூலம், விசா நடைமுறை எளிதாக்கப்படும். முதலீட்டாளர்களும் அவர்களது குடும்பத் தினரும் இந்தியாவில் குடியிருப்பு சொத்துக்களை வாங்க முடியும். மேலும், இந்தியாவில் அவர்கள் கல்வி பயிலவும் பணியாற்றவும் இயலும். குடும்பத்தினர் வேலை பெறவும் அனுமதி தரப்படும். ஆனால், இந்தத் திட்டம் சீனா, பாகிஸ்தான் நாட்டினருக்குப் பொருந்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழில் செய்வதை எளிமைப்படுத்தவும், முதலீடு, வருவாய், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் ஏற்ற விதத்தில் அந்நிய முதலீடு வரத்துக் குவிவதை நோக்கமாக கொண்டு அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளில் மத்திய அரசு திருத்தங்களைச் செய்துள்ளது. அதில் ஒன்றாக இந்த நிரந்தரவாசத் தகுதித் திட்டம் இடம்பெறுகிறது. இதனால் இந்தியாவில் முதலீடு செய்வது அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்பும் பெருகும் என மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

