சென்னை: அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாகப் பேரவையில் வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான மகப்பேறு விடுப்புக்காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்று அதிமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணிகளில் வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும் மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு வேலை பார்க்கும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதமாக உயர்வு
1 mins read

