நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கை விசாரிக்கத் தடை

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கை விசாரிக்கத் தடை

1 mins read
7eaee6b6-4cd4-45a4-9765-91406ba37f21
-

சென்னை: தமி­ழக அரசை­யும் அமைச்­சர்­களை­யும் விமர்­சித்து செய்தி வெளி­யிட்­ட­தாகக் கூறி நக்­கீ­ரன் இத­ழின் ஆசி­ரி­யர் கோபால் மீது கடந்த 2012 முதல் சென்னைப் பெரு­ந­கர மாவட்ட நீதி­மன்றத்­தில் 18 குற்­ற­வி­யல் அவ­தூறு வழக்­கு­கள் தொட­ரப்­பட்­டுள்­ளன. இதில் முதல்­வர் ஜெய­ல­லிதா சார்­பில் 11 வழக்­கு­களும் இந்­நாள் மற்­றும் முன்னாள் அமைச்­சர்­கள் சார்­பில் 7 வழக்­கு­களும் நிலுவை­யில் உள்­ளன. இந்த 18 வழக்­கு­களின் விசா­ரணையை ரத்து செய்­யக்­கோரி உயர் நீதி­மன்றத்­தில் நக்­கீ­ரன் கோபால் தாக்கல் செய்த மனு மீதான விசா­ரணை நீதி­பதி பி.என்.பிர­காஷ் முன்பு நடந்தது. இதை­ய­டுத்து நீதி­பதி, நக்­கீ­ரன் கோபால் மீதான 18 வழக்­கு­களின் விசா­ரணைக்­கும் இடைக்­காலத் தடை விதித்­தும் விசா­ரணைக்கு நேரில் முன்­னிலை­யாக விலக்கு அளித்­தும் இதற்கு பெரு­ந­கர அரசு குற்­ற­வி­யல் வழக்­க­றி­ஞர் பதி­ல­ளிக்க வேண்டும் எனவும் உத்­த­ர­விட்­டார்.