பிள்ளையார் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் காரணமாக மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை வெகுவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவே மிக அதிக விலை என வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று முகூர்த்த நாள், இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள். எனவேதான் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட வியாபாரிகள், இந்தாண்டு மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளதாகவும் கூறினர். படம்: தகவல் ஊடகம்
பிள்ளையார் சதுர்த்தி, முகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கடும் உயர்வு
1 mins read
-

