சென்னை: இலங்கையில் இருந்து விமானம் மூலம் ஹெராயின் போதைப்பொருள் கடத்திய பெண், வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சாந்தினி என்ற அப்பெண்ணின் வயிற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை அவர் கேப்சூல் வடிவில் விழுங்கியிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதானார்.
வயிற்றில் போதைப்பொருள் கடத்திய பெண்
1 mins read

