சென்னை: தமிழகத்தில் சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டதாக சிறார்கள் மீது 1,814 வழக்குகள் பதிவாகின. இவற்றில் 1,483 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளில் பதியப்பட்டவை. இதேபோல, கடந்த 2014ஆம் ஆண்டு சிறார் மீது 1,549 வழக்குகள் பதியப்பட்டன. 2014ல் பதியப்பட்ட வழக்குகளைவிட, 2015ஆம் ஆண்டு 265 வழக்குகள் அதிகரித்துள்ளன. மேலும், பல்வேறு வழக்குகள் தொடர்பாக 2014ல் 1,892 சிறார்களும், 2015ல் 2,421 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்
1 mins read

