புதுடெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு அவர்கள் கேட்ட சிறப்பு அந்தஸ்தை தரமுடியாது. ஆனால், அம்மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தை கருத்தில்கொண்டு அந்த சட்டத்தின்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவின் பொல்லாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு சிறப்பு நிதி வழங்குவதுடன் வரிச்சலுகையும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்காகச் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜெட்லி: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி தருகிறோம்; சிறப்பு அந்தஸ்து இல்லை
1 mins read

