நாடு முழுவதும் ரயில்களுக்கு வெடிகுண்டு மரட்டல்

நாடு முழுவதும் ரயில்களுக்கு வெடிகுண்டு மரட்டல்

1 mins read

சென்னை: நாடு முழுவதும் சதாப்தி ரயில்களுக்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட் டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை 6 மணிக்கு சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரு சதாப்தி ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய், நவீன கருவிகள் மூலம் ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் சோதனை நடைபெற்றது. எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.