பிள்ளையார் சிலை தொடங்கியது ஊர்வலம்

பிள்ளையார் சிலை தொடங்கியது ஊர்வலம்

1 mins read

சென்னை: பிள்ளையார் சிலைகள் ஊர்வலம் நேற்று தொடங்கியதையடுத்து சென்னையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி 4 நாட்கள் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி 15 ஆயிரம் போலிசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகள் ஆறு இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் ஊர்வலப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், நேற்று முன்தினம் உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி, விரிவான ஆலோசனைகளை வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.