தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய பிரதேசம்: உறங்கும்போது வாய்க்குள் நுழைந்த பாம்பின் தலையைக் கடித்து விழுங்கிய ஆடவர் உயிர் தப்பினார்

1 mins read

இந்­தூர்: வாயைத் திறந்­து­கொண்டு ஆட­வர் ஒரு­வர் அயர்ந்து தூங்­கிக் கொண்­டி­ருந்தார். அப்­போது அவரருகே ஊர்ந்து வந்த பாம்பு ஒன்று ஏதோ ஓட்டை தெரி­கின்றதே என்று அவ­ரது வாய்க்­குள் புகுந்து விட்டது. மத்­தியப் பிர­தேச மாநி­லத்­தின் இந்­தூ­ரில் இந்த சம்ப­வம் நடந்தது. வினோத் ரகு­வான்‌ஷி என்ற அந்த ஆட­வர் வாய்க்­குள் பாம்பு புகுந்த­தும் 'அய்யோ அம்மா' என்று அல­றும்­போது அவரை­யும் அறி­யா­மல் அச்­சத்­தில் அந்தப் பாம்பைக் கடித்து அதன் தலைப் பகுதியை விழுங்கிவிட்­டார். தலை­யற்ற முண்டம் மட்­டும் வெளி­யில் துடித்­துக்கொண்­டி­ருந்தது.

சத்தம் கேட்டு உறக்­கம் களைந்து ஓடோடி வந்த அவ­னது தாயார், மக­னின் வாயில் இரத்­தம் சொட்­டு­வதைக் கண்டு அரண்டு போனார். பின்னர் தரை­யில் பாம்­பின் வால் பகுதி மட்­டும் துடிப்­பதைக் கண்டு விவ­ரத்தை மக­னி­டம் கேட்­ட­றிந்தார். உட­ன­டி­யாக அவரை மருத்­து­வ­மனைக்கு அழைத்­துச் சென்று உரிய சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. உயி­ருக்கு எந்த ஆபத்­தும் இன்றித் தப்பினார். இந்த சம்ப­வத்தைப்­போன்று ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ஜார்­கண்ட் மாநி­ல கிரா­மத்­தில் ஒரு­வர், தம்மைத் தாக்க வந்த கட்­டு­வி­ரி­யன் பாம்பு ஒன்றைக் கடித்­துக் கொன்றார். கடித்த அந்த ஆட­வர் 10 மணி நேரத்­தில் உயி­ரிந்தார். இந்த சம்ப­வத்­தில் பாம்பைக் கடித்து விழுங்­கிய வினோத் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி னார்.