பூஞ்ச்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பூஞ்ச்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

2 mins read

ஜம்மு: காஷ்மீரின் பூஞ்ச் பகுதி யில் போலிஸ்­கா­ரர்­களுக்­கும் தீவிர­வா­தி­களுக்­கும் இடையே நடந்த துப்­பாக்­கிச் சண்டையில் நேற்று முன்­தி­னம் மூன்று தீவிர­வா­தி­களும் போலிஸ்­கா­ரர் ஒரு­வ­ரும் கொல்­லப்­பட்­ட­னர். காஷ்மீரின் பூஞ்ச் பகு­தி­யில் புதிதாகக் கட்­டப்­படும் ஒரு வீட்டில் தீவிர­வா­தி­கள் பதுங்­கி­­இருப்­ப­தாகப் பாது­காப்­புப் படை ­யி­ன­ருக்­குத் தகவல் கிடைத்­ததையடுத்துப் போலிசார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். இரு தரப்­புக்­கும் இடையில் கடும் துப்­பாக்­கிச் சண்டை நடந் தது. அதில் தீவிர­வா­தி­கள் மூவர் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­னர். தீவிர­வா­தி­கள் சுட்­ட­தில் காவல்துறையினர் ஒருவர் உயி­ரி­ழந்தார். மற்றொரு காவல்துறையினர் காய­மடைந்தார். அக்கட்டடத்தில் இருந்து மேலும் ஒரு தீவிரவாதியின் உடலைப் போலிசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இதேபோல், நவ்காம் பகு­தி­யில் கடந்த ஞாயிற்­றுக்­கிழமை நடந்த சண்டை­யில் 4 பாகிஸ்­தான் ஊடு­ரு­வல்­கா­ரர்­கள் கொல்­ லப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது. அவர்­களி­டம் இருந்து ஏ.கே.47 ரக துப்­பாக்­கிகள், வெடி­ம­ருந்­து­கள் கைப்­பற்­றப்பட்டன. இதற்­கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பட்­க­மில் நடந்த வன்முறையின்­போது ஜாவித் அகமது தார் (23) என்­ப ­வர் படு­கா­ய­மடைந்தார். மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்­தி­னம் உயி­ரி­ழந்த­தால் வன்முறையில் உயி­ரி­ழந் ­தோர் எண்­ணிக்கை 79ஆக உயர்ந்­துள்­ளது. இதனால் அப்­ப­கு­தி­யில் நேற்று மக்கள் ஆர்­ப்பாட்­டத்­தில் ஈடு­பட்ட னர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் களைக்க பாது­காப்புப் படை­வீ­ரர்­கள் கண்ணீர் புகை­குண்­டு­களைப் பயன்­படுத்­தி­னர். இதில் போலிஸ்­கா­ரர்­கள் உட்படப் போராட்­டக்­கா­ரர்­ கள் பலரும் காய­மடைந்த­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன. இதுதவிர, காஷ்­மீ­ரில் 66வது நாளாக நேற்றும் பல்வேறு இடங் களில் வன்முறை சம்ப­வங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறை சம்பவங்களில் சுமார் 112 பேர் காய­மடைந்ததாகக் கூறப்படுகிறது.