டெல்லி: ஆள்கடத்தலில் முதலிடம்

டெல்லி: ஆள்கடத்தலில் முதலிடம்

1 mins read

புதுடெல்லி: டெல்­லி­யில் சரா­ச­ரி­யாகத் தினமும் 21 பேர் கடத்­தப்­பட்­டுள்­ள­தாகத் தேசிய குற்­றப்­ ப­திவு ஆவணக் காப்­ப­கத்­தின் 2015ஆம் ஆண்டு தக­வல்­கள் தெரி­விக்­கின்றன. இந்­தி­யா­வின் மற்ற நக­ரங்க­ளோடு ஒப்­பி­டுகை­யில் டெல்­லி­யில் அதி­க­மான ஆள்­க­டத்­தல் சம்ப­வங்கள் நடை­பெ­று­வ­தா­க­வும் அது தெரி­வித்­துள்­ளது. தேசிய குற்­றப்­ப­திவு ஆவணக் காப்பகத் தக­வ­லின்­படி, 2015ஆம் ஆண்டில் விகி­தா­சா­ரப்­படி டெல்­லி­யில் ஒரு லட்சம் பேருக்கு 37 பேர் கடத்­தப்­பட்­டுள்­ள­னர். இந்த அடிப்­படை­யில் நாட்­டி­லேயே ஆள் கடத்­த­லில் டெல்லி முத­லி­டம் வகிக்­கிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் இந்த விகிதம் ஒரு லட்சம் பேருக்குக் கிட்டதட்ட 6 பேராக உள்ளது.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் அதிக பட்­ச­மாக 11,999 கடத்­தல் வழக்­கு­களும் மகா­ராஷ்­டி­ரா­வில் 8,255 வழக்­கு­களும் பதி­வா­கி­யுள்­ளன. பீகாரில் 7,128, மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 6,778, மேற்கு வங்கத்­தில் 6,115, அசாமில் 5,831, ராஜஸ்­தா­னில் 5,426, அரியானா வில் 3,520, ஒடி­சா­வில் 3,236 வழக்­கு­களும் பதி­வா­கி­யுள்­ளன. பெரும்பாலான கடத்தல் சம்பவங்களில் சிறார்களே குறி வைக்கப்பட்டுள்ளனர். ஒட்­டு­மொத்­த­மாக 2015ஆம்­ ஆண்டு இந்­தி­யா­வில் 82,999 ஆள் கடத்­தல் வழக்­கு­கள் பதி ­வா­கி­யுள்­ளன. இவற்­றில், 1,260 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். 774 பேர் மிரட்­டிப் பணம் பறிப்­ப­தற்­காகக் கடத்­தப்­பட்­ட­னர். 18,629 பேர் இதர கார­ணங்களுக்­காகக் கடத்­தப்பட்­டு உள்­ள­னர். 31,884 பெண்கள் கட்டாய திரு­ம­ணத்­துக்­காகக் கடத்­தப்­பட்­டுள்­ள­னர்.