பரிசோதகரின் வேலையைப் பறித்த டுவிட்டர்

பரிசோதகரின் வேலையைப் பறித்த டுவிட்டர்

1 mins read

­­­பு­து­டெல்லி: ராஜஸ்­தான்-ஹரியானா செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்த ஒருவர் பய­ணச்­சீட்டுப் பரி­சோ­த­க­ரின் பணிக்கு டுவிட்­டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். முன்­ப­திவு செய்­யப்­பட்­டி­ருந்த இரண்டாம் வகுப்­புப் பெட்­டி­யில் ஏறிய ஒரு டிக்கெட் பரி­சோ­த­கர் அங்கு இருந்த அனை­வ­ரி­ட­மும் இருக்கை வச­திக்­காக தலா 15 ரூபாய் வசூ­லித்­துக் கொண்­டு­ இருந்தார். இதற்கு உரிய ரசீது தரும்படி கேட்டார் கோவிந்த் நாராயண் என்ற அப்பயணி. ஆனால் அவ­ரி­டம் இருந்து சரியான பதில் கிடைக்­கா­த­தால், கோவிந்த் தனது டுவிட்­டர் மூலம் பரி­சோ­த­க­ரின் இந்நடவடிக்கை பற்றி ரயில்­வே­ அமைச்­சர் சுரேஷ் பிரபு, பிர­த­மர் மோடி, ஜோத்பூர் வட்டார ரயில்­வேத்­துறை மேலாளர் ஆகி­யோ­ருக்குத் தெரிவித்தார்.

ஜோத்பூரில் ரயிலில் ஏறிய லஞ்ச ஒழிப்­புத்துறை அதி­கா­ரி­கள் அந்த டிக்கெட் பரி­சோ­த­கரை சோதனை­யிட்­ட­போது அவர் வசமாக சிக்கிக் கொண்டார். இவ்விவ­ரங்கள் உட­ன­டி­யாக டுவிட்­டர் மூலம் ரயில்­வே மேலா­ள­ருக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது. ஷியாம்பால் என்ற அந்த டிக்கெட் பரி­சோ­த­கரை உட­ன­டி­யாக இடைக்­கால பணி­நீக்­கம் செய்­யும்படி அவர் டுவிட்­டர் மூலமாக உத்­த­ர­விட்­டார்.