லக்னோ: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரது மூக்கை அறுத்து எரிந்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நரோதா ஹன்ஸ்ராம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ரத்தோர். இவரது மனைவி கம்லேஷ். இருவருக்கும் மணமாகி ஏழாண்டுகள் ஆகிவிட்டன. இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சஞ்சீவ் வேலை முடிந்து மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடிதான் வீட்டுக்கு வருவார். அவ்வாறு ஒரு நாள் அவர் போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி கம்லேஷ் யாரோ ஒருவருடன் கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ், தன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, கம்லேஷின் நுனி மூக்கை ஒரு கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடி விட்டார். துடியாய்த் துடித்த கம்லேஷை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். சஞ்சீவ் ரத்தோரை போலிசார் வலைபோட்டுத் தேடி வருகின்றனர்.
மனைவியின் மூக்கை அறுத்த கணவனுக்கு போலிஸ் வலைவீச்சு
1 mins read

