மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் கல்லூரி உள்ளது. கல்லூரியைக் கள்ளர் கல்விக்கழக அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. கல்லூரி யின் செயலர் மற்றும் தாளாளரான பாண்டியன், மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை கல்லூரியின் தலை வராக மாசானம், செயலராக பாலசுப்ரமணியம் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். இவர்கள் பொறுப்பு வகித்தபோது கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வசூலிக்கப்பட்ட ரூ.65 லட்சத்தை கையாடல் செய்துள்ளனர் என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கல்லூரியில் தற்போது துறைத் தலைவ ராக இருக்கும் மாசானம், பாலசுப்ரமணியம் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கல்லூரியில் ரூ.65 லட்சம் கையாடல்
1 mins read

