சிங்கப்பூரிலிருந்து நேற்றுக் காலை சென்னை சென்ற விமானத்தில் 'சாம்சங் நோட் 2' கைபேசி தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் பரபரப் பாக இருந்தது. சென்னையில் தரையிறங்கியபோது, பயணி களின் தலைக்குமேல் உள்ள பெட்டி பாதுகாப்புப் பகுதியில் இருந்து புகை வருவதை விமானச் சிப்பந்தி ஒருவர் கண்டதாகவும் விமானம் திட்டமிட்டபடி தரையிறங்கி நின்ற போது விமானச் சிப்பந்திகள் கைபேசி எரிவதை அணைத்ததாக வும் இண்டிகோ ஏர்லைன்ஸ் கூறி யது. இருப்பினும் பயணிகள் இறங்கிச் செல்வதில் எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை என் றும் அது குறிப்பிட்டது.
சிங்கப்பூர்- சென்னை விமானத்தில் பற்றி எரிந்த கைபேசி
1 mins read

