கார் உற்பத்தியில் தென்கொரியாவை மிஞ்சியது இந்தியா

கார் உற்பத்தியில் தென்கொரியாவை மிஞ்சியது இந்தியா

1 mins read

புது­டெல்லி: வாக­னங்கள் உற்­பத்­தி­யில் இந்தாண்டு இந்­தியா உலக நாடு­கள் மத்­தி­யில் 5வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. தனது நேரடிப் போட்டி நாடான தென்­கொ­ரி­யாவை இந்­தி­யா ஆ­றா­வது இடத்­திற்­குத் தள்­ளி­யுள்­ளது. ஜெர்­மனி, சீனா, அமெ­ரிக்கா, ஜப்­பான் நாடு­கள் கார் உற்­பத்­தி­யில் உலக அள­வில் முதல் நான்கு இடங்களில் உள்­ளன. 2016ல் மட்­டும் இன்றைய தேதி வரை இந்­தி­யா­வில் மொத்தம் 25.7 லட்­சம் வாக­னங்கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­தி­யா­வின் நேரடி போட்டி நாடான தென்­கொ­ரி­யா­வில் ஹுன்­டாய், கியா கம்­பெனி தொழி­லா­ளர்­கள் சம்பள உயர்வு கோரி வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தால் அந்­நாட்­டில் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இனி வரும் ஆண்­டு­களி­லும் இந்­தியா கார் உற்­பத்­தி­யில் முன்­ன­ணியில் இருக்க வாய்ப்­புள்­ள­தாக பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இந்தியாவின் பொரு­ளி­ய­லில் மோட்­டார் வாக­னத் தொழில் 7 விழுக்­காடு வகிக்­கிறது. 'மேக் இன் இந்­தியா' திட்­டத்­தின் மூலம் கார் உற்­பத்தித் தொழில் நல்ல வளர்ச்சி அடைந்­துள்­ளது. இத்­திட்­டத்­தின் வாயி­லாக மோட்­டார் வாகன தொழி­லில் மட்­டும் இந்தாண்டு இறு­திக்­குள் 2.5 கோடி பேருக்கு வேலை­வாய்ப்­புக் கிடைக்­கும் என்று ஆய்வு தெரி­விக்­கிறது.