ஜம்மு: இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் காயம் அடைந்த 26 வயது ராணுவ வீரர் குர்னாம் சிங் சனிக்கிழமை இரவு மரணம் அடைந்தார். வீரமரணம் அடைந்த குர்ணம் சிங் பற்றி தாயார் ஜஸ்வந்த் கவுர், "என் மகன் ராணுவத்தில் சேர்ந்ததும் நான் வீர மரணம் அடைந்தால் அழக்கூடாது என்று சொன்னான். அதன்படி நான் அழமாட்டேன்," என்றார். "காயம் அடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பான மருத்துவ வசதிகள் தேவை. குர்னாம் சிங் காயம் அடைந்ததும் அருகில் உள்ள பாக்ஷி நகர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தனியாக மருத்துவமனை இருந்திருந்தால் என் மகனைக் காப்பாற்றி இருக்கலாம். எனவே நமது வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க நல்ல மருத்துவமனை தேவை எனப் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று தந்தை குல்பீர் சிங் கூறியுள்ளார். குர்னாம் சிங்கின் சகோதரி குர்ஜித் கவுர், எல்லைப் பாதுகாப்புப் படைக்கு என்று தனியாக என்னுடைய சகோதரன் பெயரில் மருத்துவமனை கட்டப்படவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

