குமரி: காவிரி விவகாரத்தில் பாஜகவின் செயல்பாட்டுக்கு தமிழக அரசியல் கட்சிகள் துணை நிற்கக் கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. குமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் ஒருங்கிணைப்புக்கு குழுத் தலைவர் பாண்டியன், பாஜகவை ஆதரித்தால் காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நவம்பர் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு விவசாயிகள் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஜகவை ஆதரிக்க வேண்டாம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
1 mins read

